Wednesday, February 18, 2009

காதலை தேடி என் பயணம் ....

என் இதயம் பிரித்து
உன் இதயம் எடுத்துக் கொண்டாய்

நான் உன் காதலை கேட்கவில்லை நீ
காதலித்த எதையாவது கொடு என்று கேட்கிறேன் ...

என் காதல் ரோஜாக்களுக்கு
தீ வைக்க நினைக்கிறாய்
உனக்கு மறுப்புச் சொல்லி
எனக்கு பழக்கமில்லை
என்றைக்காவது இந்த பூந்தோட்டம்
பற்றிக்கொள்ளளாம்


அப்போது நான் அணைந்து போயிருப்பேன் ....

என்னுள் நிரம்பி இருக்கும் நீ
என் விழிகளின் வழி
மட்டும் சிந்துகிறாய்
கண்ணீராய் .......



1 comment:

  1. ///நான் உன் காதலை கேட்கவில்லை நீ
    காதலித்த எதையாவது கொடு என்று கேட்கிறேன் .///

    அட அட . என்னமா பீல் பண்ணி எழுதிருக்கீங்க மாம்ஸ் ..!!

    ReplyDelete